கம்பைநல்லூரில் உள்ளூர் பேரீச்சைக்கு வரவேற்பு கிலோ ரூ.280க்கு விற்பனை

அரூர் : பாலைவன பகுதி பயிரான பேரிச்சை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரும்பு சத்து மிகுந்தது என்பதால் அனைத்து வகை மக்களும் அதிக அளவில் சாப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பேரிச்சை பயிரிடப்பட்டு, நல்ல விளைச்சல் தந்து வருகிறது. குறிப்பாக தர்மபுரி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளூர் பேரிச்சை பழம் அதிக அளவில் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது. பொதுமக்களும் அதிக அளவில் வாங்குகின்றனர்.

ஒரு கிலோ பேரிச்சை ரூ.240 முதல் ரூ.280 வரை விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் அரியகுளம், ஓசூர், பெங்களூரு, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இருந்து மொத்தமாக பேரிச்சை பழங்களை வாங்கி வந்து, சாலையோரங்களில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதேபோல் வடமாநில நாவல் பழங்களும் சாலையோரம் வண்டிகளில் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அவர்கள் ஒரு கிலோ நாவல் பழத்தை ரூ. 240 முதல் ரூ. 280 வரை விற்பனை செய்கின்றனர். சீசன் காரணமாக பழங்கள் விற்பனைக்கு வருவது அதிகரித்து வருவதால், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

Related Stories: