பெரம்பலூர், ஜூலை 8: பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, மாணவ, மாணவியருக்கான துணைத் தேர்வு இன்று (8ம்தேதி) தொடங்குகிறது. தேர்வு குறித்த, வினாத்தாள் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம். பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவ மாணவருக்கான துணைத் தேர்வு இன்று (8ம்தேதி) புதன்கிழமை தொடங்கி வருகிற 15ஆம்தேதிவரை நடைபெறுகிறது. இதன்படி 8ஆம்தேதி தமிழ், 9ம்தேதி வியாழக்கிழமை ஆங்கிலம், 10ம்தேதி வெள்ளிக்கிழமை கணிதம், 13ம்தேதி திங்கட் கிழமை அறிவியல், 14ம்தேதி செவ்வாய்க்கிழமை சமூகஅறிவியல், 15ம்தேதி புதன்கிழமை விருப்ப மொழி பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது.
இந்த தேர்வுகள் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், குன்னம் தாலுக்கா, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் நடைபெறுகிறது. குறிப்பாக பள்ளிகளில் மார்ச் மாதம் தேர்வுஎழுதி தேர்ச்சிபெறாத மாணவ-மாணவியர் மற்றும் புதிதாக துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களும் பங்கேற்கும் இந்ததே தேர்வினை, மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 403 பேர்களும், மேலமாத்தூர் ராகவேந்திரா மேல்நிலைப் பள்ளியில் 219 பேர்களும் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் அதற்கான நாட்களில் காலை 10-மணிக்கு தொடங்கி பகல் 1:15 மணி வரை நடைபெறும்.
10ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் தொடர்பாக தங்களது புகார்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெறும் பொருட்டு மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் ஆகியோர் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (8ஆம்தேதி) முதல் 15ஆம் தேதி வரை, அனைத்துத் தேர்வு நாட்களிலும் காலை 8:00 மணி முதல் இரவு 7 மணி வரை 9498383075 மற்றும் 9498383076 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு, அன்றைய தேர்வு குறித்த, வினாத்தாள் குறித்த, புகார்கள் குறித்தக் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் கேட்டு அறிந்துகொள்ளலாம். dgequestion paperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பதிவிட்டு தங்கள் கருத்துக்களை, புகார்களை, சந்தேகங்களைத் தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
