வேதாரண்யம் பகுதியில் விவசாய நிலங்களை இயற்கை உர சாகுபடிக்கு மாற்ற மாடுகள் கிடை கட்டும் பணி தீவிரம்

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் விவசாயிகளின் நிலங்களை ரசாயன உரத்திலிருந்து இயற்கை உர சாகுபடிக்கு மாற்றுவதற்காக மாடுகள் கிடைபோடும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 24 ஆயிரம் ஏக்கரில்ஆண்டு தோறும் குறுவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெறுகிறது.

இந்த சாகுபடிக்கு பெரும்பாலும் விவசாயிகள் நவீன உரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் வயல்களில் ஆடு மாடு கிடைகட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.வழக்கமாக குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்படும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில் தலைஞாயிறு பகுதியில் வயல்களை குறுவை சாகுபடிக்கு தயார் செய்த விவசாயிகள் பின்பட்ட குறுவை சாகுபடிக்காக தண்ணீர் கிடைக்குமா என்ற நிலையில் காத்து உள்ளனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் மழை வந்தால் மட்டும் விவசாயம் செய்யும் மானாவாரி சாகுபடி சம்பா பட்டத்தில் ஆண்டுதோறும் செய்து வருகின்றனர். இதற்காக தங்கள் வயல்களில் ஆடு மாடுகளை கிடைக் கட்டும் பணியை தற்போது மேற்கொண்டுள்ளனர்.இதற்காக ஆடு மாடு கிடை கட்டும்தொழிலை மேற்கொள்ளும் விவசாயிகள் வீட்டில் உள்ள மாடுகளை நான்கு மாதத்திற்கு ஓட்டிச்சென்று கிடை அமைக்கின்றனர்.

இதற்காக மாட்டு உரிமையாளரிடம் நான்கு மாதத்திற்கு ரூபாய் 800 கூலியாக பெறுகின்றனர். இப்படி சேர்த்த ஆடு மாடு கிடைகளை வயல்களில் ஆடு, மாடுகளை கிடை கட்டுவதற்கு ஒரு நாள் இரவுக்கு மாட்டுக்கு 15 ரூபாயும், ஆட்டுக்கு 5 ரூபாயும் கூலியாகவும், வயல் உரிமையாளர்களிடமிருந்து பெறுகின்றனர்.

குறுவை சாகுபடி பொய்த்துப் போன வேளையில் விவசாய நிலங்களை ரசாயன உர சாகுபடியில் இருந்து இயற்கை உர சாகுபடிக்கு மாற்றுவதற்கு கிடை கட்டும் தொழிலில் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.விவசாயிகள் ஆர்வமாக தங்கள் வயல்களை இயற்கை உரத்திற்கும் மாற்றுவதற்காக நாள்தோறும் கிடை கட்டி வரும் பணி வேதாரண்யம் பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: