சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

*சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் : சேலத்தில் சொத்து தகராறில் தந்தையை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.சேலம் மாவட்டம் சங்ககிரி பக்கமுள்ள வைகுந்தம் வெள்ளையம்பாளையம் வேடிச்சிக்காட்டை சேர்ந்தவர் சின்னபழனி (81).

விவசாயி. இவருக்கும் மகன் சுப்பிரமணிக்கும் (61) இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மண்வெட்டியால் தந்தையை அடித்தார்.

இதில் படுகாயம் அடைந்த சின்னபழனி இறந்து போனார். இதையடுத்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மகன் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தம்பிதுரை ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் நடராஜன், குற்றவாளியான சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories: