சென்னை: சமூகநீதியின் முன்னோடியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாகவும் திகழ்ந்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன். கல்வி, சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதிக்காக இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய ஒளிவிளக்கு பேரொளியாக திகழ்கிறது என்று விஜய் தெரிவித்துள்ளார்.
