×

கந்தர்வகோட்டை கடைவீதியில் போக்குவரத்து காவலர் நியமிக்க வேண்டும்

 

கந்தர்வகோட்டை, ஜூலை 6: கந்தர்வகோட்டை கடைவீதியில் போக்குவரத்து காவலர் நியமிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்டார வள மையம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளது. இந்த நகர் தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால் இந்த வழியாக அதிக கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர்.

இதனால் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடி வருகிறது. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதையடுத்து கந்தர்வகோட்டை நகருக்கு போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து காவலர் நியமனம் செய்ய வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Kandarvakottai ,Pudukkottai district ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்