சென்னை: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களை பனையூரில் சந்தித்த விஜய், விரைவில் பொறுப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், புகழேந்தி மற்றும் ஜெ.கருணாநிதி, வி.பி.கலைராஜன், நிலக்கோட்டை அன்பழகன், கீதா மணிவண்ணன் உள்ளிட்ட முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர் சந்தீப் ஆனந்த் ஆகியோர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அதேபோல், நடிகர் ரவி மரியாவும் தவெகவில் இணைந்தார்.
பனையூர் அலுவலகத்தில் சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேல் நடைபெற்றது. அப்போது, நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்; அனைவருக்கும் விரைவில் பொறுப்பு வழங்குவோம் என வாக்குறுதி வழங்கியதாக தெரிகிறது.
பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக அளித்த பேட்டி:
இன்று முதல்வரை நேரடியாகச் சந்தித்தோம். அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இந்தியா முழுவதும் எத்தனை வாஷிங்மிஷின் எங்கெங்கு சென்று கொண்டு இருக்கிறது, ஏதாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இருக்கிறதா? ஆளுங்கட்சி எதிர்கட்சி மீது வழக்குப் போடுவது வழக்கம். நாங்கள் ஓடி, ஒளியாமல் வழக்குகளை சந்திப்போம். அவர்களுடன் உள்ளவரை எங்களை நல்லவர்கள் என்று சொன்னார்கள். இவ்வாறு கூறினார்கள்.
