அபுதாபி, லண்டன் செல்ல வேண்டிய விமானங்கள் 2 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி

 

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 5 மணியளவில் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில், சென்னையில் இருந்து அபுதாபி செல்வதற்கு, 186 பயணிகள் இருந்தனர். அதிகாலை 2 மணிக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்து, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் நீண்ட நேரமாக, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். அதன் பின்பு ஏர் அரேபியா விமானம், இரண்டரை மணி நேரம் தாமதமாக, நேற்று காலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து, அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது.அதேபோல், சென்னையில் இருந்து, லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னையில் இருந்து, லண்டன் புறப்பட்டு செல்ல தயார் நிலையில் இருந்தது. விமானத்தில் பயணிக்க 268 பயணிகள் காத்திருந்தனர். அனைவரும் அதிகாலை 2.30 மணிக்கு முன்னதாக, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, பாதுகாப்பு சோதனைகள் உட்பட அனைத்தையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

ஆனால் அந்த விமானமும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், 2 மணி நேரம் தாமதமாக, நேற்று காலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றது. விமானங்கள், 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடை ந்தனர்.

 

Related Stories: