பொய் வழக்காலும்-கைது நடவடிக்கையாலும் திமுகவை முடக்க பார்ப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு. அவதூறு பேசி – பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் – கைது நடவடிக்கைகளாலும் திமுகவை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: