அதிமுகவில் சம்பாதித்துவிட்டு கட்சி மாறிய சி.விஜயபாஸ்கர்தான் துரோகி: அதிமுக மாவட்ட செயலாளர் விமர்சனம்

 

புதுக்கோட்டை: அதிமுகவில் சம்பாதித்துவிட்டு கட்சி மாறிய சி.விஜயபாஸ்கர்தான் துரோகி என அதிமுக மாவட்ட செயலாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார். அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் தவெகவில் நேற்று இணைந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பழனிவேல்; கட்சியை விட்டு துரோகிகள் வெளியேறிட்டு இருக்காங்க..

விராலிமலை இடைத் தேர்தலில் அதிமுக 100% வெற்றி பெறும். சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்ததால் புதுக்கோட்டை அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. குட்கா வழக்கு உள்ளவரை எப்படி தவெகவில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார். தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

Related Stories: