நெல்லை இரட்டை கொலை சம்பவம் – 6 தனிப்படைகள் அமைப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தை, 5 வயது மகன் இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை தேடிப் பிடிக்க 6 தனிப்படைகள் காவல்துறை அமைத்தது.

நெல்லை இரட்டை கொலை சம்பவத்தில் 20 பேர் கொண்ட கும்பல் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெருமாள் பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்தது. பெருமாள் பாண்டியன் மகன்கள் உள்பட 20 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். வீரவநல்லூர், மூலச்சி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: