×

மயிலாடுதுறை 12 மையங்களில் 3232 ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு

 

மயிலாடுதுறை, ஜூலை 3: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 2026-2027ம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 04.07.2026 அன்று தாள்-1 தகுதி தேர்வும், 05.07.2026 அன்று தாள் -2 தகுதி தேர்வும் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 12 மையங்களில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 55 பேர் உட்பட 3232 ஆசிரியர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரை நடைபெறும். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு 2.00 மணி வரை நடைபெறும்.

இத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வு கூட நுழைவுச்சீட்டு, உரிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, கருப்பு மை பந்து முனை பேனா எடுத்து வர வேண்டும். காலை 8.00 மணிக்கு தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். காலை 9.30 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இத்தேர்விற்காக மொத்தம் 200 நபர்கள் பணியாற்ற உள்ளார்கள் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

Tags : Mayiladudhara ,Mayladudhara ,Teacher Selection Board ,Mayladudhara District ,Mayiladuthura ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்