சிவகங்கை, ஜூலை 3: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்(பொ) அனிதா கிறிஸ்டி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அந்தோனி டேவிட்நாதன் முன்னிலை வகித்தார்.
இதில் ராகிங்கிற்கு எதிரான சட்ட விதிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினர். துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
