சென்னை: வழக்குகள் நெரிப்பதால் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்கின்றனர் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுபவர்களின் பின்னணியில் வழக்கு பயம் மட்டுமே உள்ளது. சுயநலத்துக்காகவே அதிமுகவில் இருந்து விலகி வருகின்றனர்.சொத்துக்குவிப்பு வழக்குகள் நெரிப்பதால் அதிமுகவை விட்டு வெளியேறுகின்றனர் என்றும் கூறினார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெக செல்லும் நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
