சென்னை: ராஜஸ்தானில் டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 7 பேர் பலியாகியுள்ளனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்தும், காயமடைந்தவர்களை அடையாளம் காண்பது குறித்தும் உள்ளூர் நிர்வாகம் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
