×

பூந்தமல்லி அருகே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

 

பூந்தமல்லி: திருவள்ளூரைச் சேர்ந்த வியாபாரிகள் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கி சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதில், சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த லோகநாதன், அன்பரசன், வனிதா, கலா ஆகியோர் சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி மேம்பாலத்தின் மீது சென்றபோது அருகே வந்த மற்றொரு சரக்கு வாகனம் உரசியதாக கூறப்படுகிறது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வாகனத்தில் வந்த 4 நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் வாகனத்தில் கொண்டு சென்ற காய்கறிகள் பழங்கள் சாலையில் சிதறின. மேம்பாலத்தின் மீது சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் காவல் நிலைய போக்குவரத்து போலீசார் சாலையில் சிதறி கிடந்த காய்கறிகளை அப்புறப்படுத்தியதோடு கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை மேம்பாலத்தின் மீது இருந்து அகற்றினர். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Poonamalli ,Thiruvallur ,Koyambedu market ,Subramanian ,Annanagar ,Chennai ,Loganathan ,
× RELATED அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு