தொடர்ந்து ஒன்பதாவது காலாண்டாக சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் உள்ள வைப்புத்தொகைகளுக்கு 8.2 % வட்டி விகிதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் நடப்புக் காலாண்டில் மூன்றாண்டு கால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7.1 % நீடிக்கிறது. பிரபலமான பிபிஎப் மற்றும் அஞ்சலக சேமிப்பு வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 % மற்றும் 4 % தக்கவைக்கப்பட்டுள்ளன. கிசான் விகாஸ் பத்திரத்திற்கான வட்டி விகிதம் 7.5 % இருக்கும். மேலும் இந்த முதலீடுகள் 115 மாதங்களில் முதிர்வடையும்.

தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கான(என்எஸ்சி) வட்டி விகிதம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.7 % நீடிக்கும். நடப்புக் காலாண்டைப் போலவே, இரண்டாவது காலாண்டிலும் மாதாந்திர வருமானத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு 7.4% வருமானம் ஈட்டித் தரும். இதன் மூலம், முக்கியமாக தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளால் இயக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், தொடர்ந்து ஒன்பதாவது காலாண்டாக மாற்றமின்றி நீடிக்கின்றன. அரசு கடைசியாக 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சில திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியது.

Related Stories: