- சட்டமன்ற உறுப்பினர்
- நைனார் நாகேந்திரன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- மதுரை மேற்கு
- எஸ்.ஆர். தங்கபாண்டி
- முதல் அமைச்சர்
- விஜய்
- மதுரை
சென்னை:தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவு: மதுரையில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசியை முறைகேடாக நலத்திட்ட உதவியாக வழங்கியதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சி அளிக்கிறது. அரசு வழங்கும் இலவச அரிசியை தங்களின் சொந்த உதவி போலக் காட்டி விளம்பரப்படுத்துவது வெட்கக்கேடானது.
துர்நாற்றம் வீசிய தரமற்ற ரேஷன் அரிசி இருந்ததால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அரிசியை பறிமுதல் செய்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே, புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, உரிய விசாரணை நடத்தி, புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய விதிமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
