- வனதி சீனிவாசன்
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- பாஜக மகளிர் பிரிவு தேசிய
- ஜனாதிபதி
- செங்கல்பட்டு
- திருத்தணி
- தவேகாஸ்
சென்னை: பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மற்றும் திருத்தணி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் விழாவில், தவெகவினர் பள்ளிச் சிறார்களை வைத்து வாழ்த்து பாடல் பாடச் செய்து ரீல்ஸ் எடுத்ததாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது. பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம்.
அது எந்த கட்சியின் புகழ் பாடும் மேடையோ, ரீல்ஸ் எடுக்கும் படப்பிடிப்பு தளமோ அல்ல. தவெக அரசு பதவியேற்ற நாள் முதல் மக்கள் பணியில் காட்ட வேண்டிய அக்கறையை, ரீல்ஸ் அரசியலில் காட்டி வருவது ஜனநாயகத்தின் வெட்கக்கேடு. முதலமைச்சர் சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதற்காக, அந்த சினிமா கலாச்சாரத்தை பள்ளி மாணவர்களிடம் திணிப்பது ஏற்க முடியாத செயல்.
இதுபோன்ற செய்கைகளை தவெக அமைச்சர்கள் ஊடக பேட்டிகளில் “முறையற்ற செயல்” என்று கூறுவது மட்டும் போதாது. மாணவர்களின் கல்வி சூழலை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தியவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
