இந்தியாவின் GAGAN செயற்கைக்கோளை பயன்படுத்தி, ஜூன் 27ம் தேதி INDIGO A320 பயணிகள் விமானம் உதய்பூர் விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. தரைவழி ரேடியோ கருவிகளைச் சார்ந்திருக்காமல், சாட்டிலைட் சிக்னல் மூலம் பயணிகள் விமானம் இந்தியாவில் தரையிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதை நாடு முழுவதும் செயல்படுத்த அரசுத் திட்டமிட்டுள்ளது.
