×

ஆப்கான் மீதான தாக்குதல் மூலம் உள்நாட்டு தோல்விகளை மறைக்க பாக்., முயற்சி – இந்தியா கண்டனம்

டெல்லி: மத்திய ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் தற்போது புதிய உச்சத்தை எட்டி உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி உள்ள வான்வெளி தாக்குதல்கள் சர்வ்தேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலை வெட்ககேடான அத்துமீறல் என்று இந்தியா மிக கடுமையாக சாடி உள்ளது.இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் உயிரிழந்ததை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. பாகிஸ்தானின் இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்புச் செயல், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீதான தாக்குதலாகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாகவும் உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது பாகிஸ்தானின் தொடர்ச்சியான பொறுப்பற்ற நடத்தையையும், உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க மேற்கொள்ளும் பயனற்ற முயற்சியையும் பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானின் அத்துமீறலில் அன்புக்குரியவர்களை இழந்த ஆப்கானியக் குடும்பங்களுக்கு இந்தியா தனது இரங்கலைத் தெரிவிக்கிறது, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

 

 

Tags : India ,Pakistan ,Afghanistan ,Delhi ,Central Asian ,Afghan ,
× RELATED இந்தியாவின் GAGAN செயற்கைக்கோளை...