கோவை: கோவை பால்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவின் முகவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டி வருகின்றனர். மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு ரூ.2 தள்ளுபடி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஆவின் முகவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
