- மீ.
- அட்டமுக்
- திருமாலவன்
- சென்னை
- துணை ஜனாதிபதி
- அத்தமுக்
- திருமாவளவன்
- விடுதலை சிறுத்தை கட்சி
- மதுரா
- இந்தியா
சென்னை: எம்.எல்.ஏக்கள் விலகுவதற்கு அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்னைகள்தான் காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே இடதுசாரிகள் விருப்பம் என்பதை அவர்கள் திரும்ப, திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார்கள்.
அதே நிலைப்பாட்டை தான் விடுதலை சிறுத்தைக்கட்சியும் கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நான் பெரிதும் நம்புகிறேன். தவெக நாளை (ஜூலை 1) நடத்தும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் வி.சி.க. பங்கேற்கிறது. நான், விசிக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்போம் என்று கூறினார்.
அதிமுகவில் இருந்து அண்மையில் 6 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய விவகாரம் குறித்து பதில் அளித்த திருமாவளவன், “எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது, அதிமுகவுக்குள் கடுமையான உள்கட்சி பிரச்னைகள் இருப்பதற்கான அறிகுறி. அந்தக் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அங்கு இருந்து 6 பேர் பதவி விலகியிருப்பதே அக்கட்சிக்குள் பிரச்சனை இருப்பதை காட்டுகின்றது. இது குறித்து நீங்கள் அதிமுகவினரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
