×

வெனிசுலா நிலநடுக்கத்தில் குடும்பத்தையே இழந்த கால்பந்து வீரர்

வெனிசுலா: வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் ஒருவர் தனது குடும்பத்தையே இழந்துள்ளார். ஜூன் 24 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது வேறொரு நகரத்தில் லூகாஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது குடும்பம் தங்கி இருந்த அடுக்குமாடி கட்டடம் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்துள்ளது. 74 மணி நேர தேடலுக்குப் பிறகு மூவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த 24-ந்தேதி மாலை, ரிக்டர் 7.2 மற்றும் ரிக்டர் 7.5 என்ற அளவில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து பயங்கர சேதம் ஏற்பட்டது.

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 1,430 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் சுமார் 774 கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதில் சுமார் 67.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமலும் போயுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், வெனிசுலா நிலநடுக்கத்தில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் தனது குடும்பத்தை இழந்து தவித்து வருகிறார். ஜூன் 24 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது வேறொரு நகரத்தில் லூகாஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது குடும்பம் கடலோரப் பகுதிகளில் ஒன்றான பிளாயா கிராண்டேவில் (Playa Grande) வசித்து வந்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

இதில் அங்கு தங்கி இருந்த ட்ரெஜோவின் மனைவி யனினா மரனெல்லா மற்றும் இரண்டு குழந்தைகள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 74 மணி நேர தேடலுக்குப் பிறகு மூவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து 3 பேரின் உடல்களும் கால்பந்து வீரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : VENEZUELAN EARTHQUAKE ,Venezuela ,Lucas ,
× RELATED திருவள்ளூர் – அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி