மு.க.ஸ்டாலினை தேடுவதாக சட்டமன்றத்தில் விஜய் பேசுகிறார். அவர் மக்கள் மனதில் இருக்கிறார்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ‘மு.க.ஸ்டாலினை தேடுவதாக சட்டமன்றத்தில் விஜய் பேசுகிறார். அவர் மக்கள் மனதில் இருக்கிறார். அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் டான்ஸ் ஆடுவார் என நினைக்கிறேன்’ என ஒரத்தநாட்டில் நடந்த திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது; “சட்டமன்றத்தை சினிமா ஷூட்டிங்போல ஆளுங்கட்சி மாற்றியிருக்கிறது. அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் டான்ஸ் ஆடுவார் என நினைக்கிறேன். மு.க.ஸ்டாலினை தேடுவதாக சட்டமன்றத்தில் விஜய் பேசுகிறார். அவர் மக்கள் மனதில் இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்சாரம் எங்கே எனத் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு உட்பட சட்டமன்றத்தில் நாம் கேட்ட கேள்விக்கு முதல்வர் எந்த பதிலும் சொல்லவில்லை. சோஃபா மாடல் அரசின் போலி பிம்பம் அடித்து, துவைக்கப்பட்டு, நொறுங்கிக் கிடக்கிறது. நம்மை கிண்டல் செய்வதாக நினைத்து முதல்வர் அவரை அவரே எக்ஸ்போஸ் செய்துகொள்கிறார்.

தூய சக்தி என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே குதிரை பேரத்தை தொடங்கினர். திமுக தூண்டுதலால் விவசாயிகள் போராடுவதாக அவர்களை முதல்வர் கொச்சைப்படுத்தினார். தமிழ்நாட்டில் மின்வெட்டால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மின்வெட்டால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் நினைக்கிறார்கள். திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் என்ற ரெடிமேட் பதிலை முதல்வர் வைத்திருக்கிறார். தற்போதைய காலகட்டத்தில் திமுகவுக்கு அதிகமான வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள்” என பேசினார்.

Related Stories: