கடலூர்: விவசாயியிடம் லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் தெற்கு மாவட்ட தவெக இணை செயலாளர் புலவேந்திரன் கட்சியில் இருந்து நீக்கம். காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியாகி சர்ச்சை. சமூக ஊடகங்களில் வீடியோ வெளியான நிலையில், புலவேந்திரனை தவெகவில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
