சென்னை: வாடகை தாய் மூலம் பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு, பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்யும் மனு மீது முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுக்கள் மீது நான்கு வாரங்களில் முடிவெடுக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பெற்றோர் உரிமை கோரி நாமக்கல் தம்பதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நாமக்கல் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
