சென்னையில் நண்பர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீசார் தீவிர விசாரணை

 

சென்னை: மவுலிவாக்கத்தில் 17 வயது சிறுமியை நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த சிறுமி 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் வீட்டை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுமி வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது பெற்றோரிடம் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தனது நண்பர்களே மவுலிவாக்கத்தில் உள்ள தங்களது அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எத்தனை பேருக்கு தொடர்பு என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது நண்பர்கள் சிறுவர்களா?, பெரியவர்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: