அரியலூரில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை எஸ்பி கொடியசைத்து தொடக்கம்

 

அரியலூர், ஜூன் 26: அரியலூர் பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி அரியலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை வகித்து, போதைப் பொருகள்களுக்கெதிரான விழிப்புணர்வு பேரணியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள், போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் பதாகைகளை கையில் ஏந்தியாறு பிரதான சாலை வழியாக சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடித்து கொண்டனர். இப்பேரணிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: