- அஇஅதிமுக
- அமைச்சர்
- Vijayabaskar
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- முன்னாள் அமைச்சர்
- சி. விஜயபாஸ்கர்
- சட்டமன்ற உறுப்பினர்
- புஸ்ஸி ஆனந்த்
- எஸ்.பி. வேலுமணி
- சி.வி.சண்முகம்
சென்னை: அதிமுகவில் இருந்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீண்டநாள் இழுபறிக்கு பிறகு வருகிற 29ம் தேதி புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார். சட்டப்பேரவை தேர்தல் தோல்வியைஅடுத்து அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தலைமையில் 25 அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து எடப்பாடிக்கு எதிராக தனி அணி உருவாக்கி, தவெகவில் இணைய முயன்றனர். ஆனால், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் விஜய் மறுத்து விட்டார்.
இதன்பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் சில உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக திரும்பினர். சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் எடப்பாடியிடம் போகவில்லை. இதனிடையே தனது அதிமுக எம்.எல்.ஏ. பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். சி.விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக, முதல்வர் விஜய்யை சந்திப்பதற்கு விஜயபாஸ்கர் 10 நாட்களாக காத்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் புஸ்ஸி ஆனந்த்துடன் சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு நேரில் சந்தித்தார். முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்தார். வருகிற 29ம் தேதி (திங்கள்) இணைப்பு விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக கூறினர். ஆனால் முதல்வர் விஜய்யை, நேரில் சந்திக்கவும், அவரது முன்னிலையில் இணையவும் வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களோடு வரும் 29ம் தேதி (திங்கள்) அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைகிறார். சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த இணைப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தவெகவில் இணையும் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதுடன், மீண்டும் விராலிமலை தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என்றும், அவருடன் இணையும் ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தவெக தலைவர் விஜய் தான் முடிவு செய்வார் என்று அமைச்சர் ஆனந்த் கூறிவிட்டதால் விஜயபாஸ்கர் அப்செட் ஆகியுள்ளார்.
