சாதி அடையாளத்துடன் பள்ளி மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை: செங்கோட்டையன் தகவல்

கோபி: கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை எப்போது புதிய இயக்கத்தைத் தொடங்குவார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். தாய் மாமன் சீர் வழங்குவது குறித்து திருமாவளவன் கூறிய கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. தேர்தல் களத்தில் மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளித்தோமோ அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சாதி சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க மாணவர்களுக்கு ஒரு புதிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையில் மாணவரின் சாதி சான்றிதழ் விபரம், முகவரி, ரத்த வகை, அடையாள எண்கள், தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களும் ஒருங்கிணைந்து இணைக்கப்படும். முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: