புதுடெல்லி: சீஷெல்ஸ் தீவின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு அந்த தீவின் அதிபர் பாட்ரிக் ஹெர்மைன் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை சீஷெல்ஸ் தீவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த விழாவில் இந்திய பாதுகாப்பு படைகளுடன், இரண்டு கடற்படை கப்பல்களும் பங்கேற்க உள்ளன.
