திருவனந்தபுரம்: கே கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் சில மாணவர்கள் சாராயம் பயன்படுத்துவதாக ஆசிரியர்களுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆசிரியர்கள் மாணவர்களின் பைகளில் சோதனை நடத்தினர். இதில் 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலில் சாராயம் இருந்தது தெரியவந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவனிடம் விசாரித்த போது வேறு ஒரு மாணவன் தனக்கு சாராயத்தை தந்ததாக கூறினான். தொடர்ந்து அந்த மாணவனிடம் விசாரித்த போது அவனுடைய தந்தை வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி வருவது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த மாணவனின் வீட்டில் சோதனை நடத்திய போது 56 பாட்டில் சாராயம் கைப்பற்றப்பட்டது.
