×

உதகையில் அதிர்ச்சி – சாயம் பூசப்பட்ட கோழி இறைச்சிகள் விற்கப்படுவதாக புகார்

உதகை: உதகையில் சாயம் பூசப்பட்ட கோழி இறைச்சி மற்றும் தடை செய்யப்பட்ட பிற உணவு பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் உதகையில் Charring Cross பகுதியில் உள்ள சில உணவகங்களில் தடை செய்யப்பட்ட ஷவர்மா, மயோனைஸ் மற்றும் சாயம் பூசப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், கூடுதல் விலைக்கு உணவுகள் விற்பனை நடைபெறுவதாகவும் உள்ளூர் மக்கள் புகாரி தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க கோரி உள்ளனர்.

உதகையில் சாயம் பூசப்பட்ட கோழி இறைச்சிகள் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிராய்லர் கோழி இறைச்சியைப் புதியது போலக் காட்டுவதற்கும், சிக்கன் 65 போன்ற உணவுகளின் நிறத்தை அதிகரிப்பதற்கும் ரசாயனச் சாயங்கள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Tags : Udupi ,Charring Cross ,Udupi, ,Nilgiris district ,
× RELATED அவர்கள் வசதிக்காக வெள்ளை அறிக்கை...