*வாகனங்களை நிறுத்த முடியாமல் மக்கள் அவதி
திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளை செய்வதற்காக பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் கொண்டு வரப்பட்ட சிமெண்ட் குழாய்கள் பல ரயில் நிலைய வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த குழாய்கள் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இங்கேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அந்த குழாய்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே, இந்த சிமெண்ட் குழாய்கள் எதற்காக கொண்டு வரப்பட்டனவோ அதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது அந்த பகுதியில் இருந்து மாற்றி வேறு இடத்துக்கு கொண்டு சென்று மக்கள் பாதிப்பை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
