வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை வனத்துறை, மருத்துவ குழு ஆய்வு

 

வில்லிபுத்தூர், ஜூன் 25: வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஆரோக்கியமாக உள்ளது என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் . வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா. இந்த யானையை வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வது வழக்கம். தற்போது மூன்று மாதம் நிறைவடைந்துள்ளதால் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ரவி மீனா, கால்நடை மருத்துவத்துறை ஏடி முருகன், கால்நடை மருத்துவர் கலைவாணன் மற்றும் ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், வனத்துறையினர் பங்கேற்றனர். ஆய்வு முடிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது என தெரிவித்தனர்.

 

Related Stories: