டெல்லி: தனியாகத் தொழில் செய்யும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற நோக்கம் மிகவும் நல்லது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
