நெமிலி சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டது காற்றில் பறந்த பேனர்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

நெமிலி : நெமிலி சுற்றுப்புற பகுதிகளில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள தவெக பேனர்கள் காற்றில் பறந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்குள்ளாகினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி நேற்றுமுன்தினம் ஏராளமான இடங்களில் தவெகவினர் சாலையோரங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நெமிலியில் நேற்றுமுன்தினம் மாலை பலத்த காற்று வீசியது.

அப்போது பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் சாலையில் விழுந்தது. சில இடங்களில் பேனர்கள் கிழிந்து சாலையில் பறந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகினர்.குறிப்பாக பஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட ராட்சத பேனரின் கம்பி உடைந்து பேனர்கள் காற்றில் விழுந்து விடுவதுபோல் தொடர்ந்து அசைந்தாடி வருகிறது.

இந்த பேனரால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள பயணிகள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவும், அச்சமூட்டும் வகையிலும் உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: