துபாய்: ஈரானில் தாக்குதலுக்கு உள்ளான அணுசக்தி நிலையங்களை பார்வையிடுவதற்கு ஐநாவின் ஆய்வாளர்களுக்கு எந்த பயணமும் திட்டமிடப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் ஈரான் அணுசக்தி நிலையங்களை பார்வையிடுவதற்கு சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்களுக்கு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இதற்கு முரணாக ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகரான தெஹ்ரானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகையில், ‘‘அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகல் பாதிக்கப்பட்ட அணுசக்தி நிலையங்களை பார்வையிடுவதற்கு சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்களுக்கு எந்த பயணமும் திட்டமிடப்படவில்லை” என்றார்.
கடந்த 2025ம் ஆண்டும் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய 12 நாள் போருக்குப் பிறகு சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்கள் ஈரானுக்கு சென்று வந்தனர். ஆனால் அமெரிக்காவால் தாக்கப்ப்டட அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை ஆய்வு செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
