- காந்திரிய வித்தியாலயம்
- ஈரோடு
- காந்தியன் வித்தியாலயம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு மாநில குழு
- அகில இந்திய இளைஞர் மன்றம்
ஈரோடு : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், தமிழ் மொழியை கட்டாய பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், தமிழ்நாடு மாநில குழுக்கூட்டம் நேற்று, நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாநில தலைவர் இப்ராஹூம் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கடந்த காலங்களை எவ்வித நுழைவுத்தேர்வும் இன்றி நடத்த அரசு போர்க்கால அடிப்படையில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாய பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதற்கென தகுதியான தமிழாசிரியர்களை போதிய அளவில் நியமித்து, மற்ற பாடங்களை போல தமிழ்மொழிக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து தேர்வு நடத்தப்பட வேண்டும்.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளதால், மாநிலங்களின் கொள்கை மற்றும் மொழி உரிமைகளுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்க வேண்டும்.
தமிழக மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பிஎம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த நிதியை எவ்வித நிபந்தனையுமின்றி ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் பேரவை தேர்தல்களை முறைப்படி நடத்த தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
அரசுபள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் தடையற்ற கற்றலை உறுதி செய்யவும், அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போர்க்கால அடிப்படையில், அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
அரசு விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில நிர்வாகிகள் சினேகா பாலமுருகன், பிரபு, வீரபாண்டியன், கணேஷ், மாவட்ட செயலாளர் அமல் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
