திருத்தணி, ஜூன் 22: தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருத்தணியில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்க திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக அளவில் பங்கேற்றதால் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
சிறுவர் பிரிவில் மாரத்தான் ஓட்டம் 1 கிமீ, இளைஞர்களுக்கான மாரத்தான் ஓட்டம் 5 கி.மீ தூரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தவெக மாவட்ட மருத்துவ அணியை சேர்ந்த எஸ்.சதீஷ், நகர செயலாளர் அகிலன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட செயலாளர் டில்லிபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றவர்கள் உடல் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் அமைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் பங்கேற்று பரிசு, பதக்கம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
