- அமைச்சர்
- கதரல்
- அருப்புக்கோட்டை
- தவெகா
- அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்
- முதல் அமைச்சர்
- ஜோசப் விஜய்
- ஜெகதீஸ்வரி
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தவெக சார்பில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: நமது ஆதரவாளர்களுக்கு சிலர் பல கஷ்டங்களை கொடுத்து வருகின்றனர். கேலி, கிண்டல், பழி சுமத்தி வருகின்றனர். குறிப்பாக எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வருகிறது. மறைமுகமாக செயல்பட விடாமல் தடுக்கவும் செய்கின்றனர்.
நமக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பிரச்னை இருப்பது போல சித்தரிக்கப்படுகிறது. அவர்களாகவே பிரச்னையை உண்டாக்குகிறார்கள். அவர்களாகவே பேனர்களை கிழிக்கிறார்கள். அவர்களாகவே எல்லாமே செய்து கொண்டு நம் மீது பழியை சுமத்துகிறார்கள். இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும்போது, அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம், நிருபர்கள், ‘உங்களை மிரட்டுகிறார்கள் என மேடையில் பேசினீர்களே, யார் மிரட்டுகிறார்கள்’ என கேட்டபோது, ‘‘யார் எவர் என பெயர் சொல்லாமல் என்னிடம் பேசுகிறார்கள். 10 நிமிடத்திற்கு ஒருமுறை என்னுடைய உதவியாளரை போனில் மிரட்டுகிறார்கள். வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். ஒருவர் போன் செய்து, என்னுடைய பைக் பஞ்சர் ஆகிவிட்டது. பஞ்சர் கடை எங்கே இருக்கு என கேட்டு நக்கலாக சிரிக்கிறார் ’’ என்றார்.
