வெள்ளோடு அருகே சாலையோரம் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட அதிசய காளான்

 

பெருந்துறை: வெள்ளோடு அருகே சாலையோரத்தில் இருந்த 2.6 கிலோ எடையுள்ள இயற்கை காளான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே அனுமன்பள்ளி காரைவாய்க்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இந்த ஆலையின் அருகே உள்ள சாலையில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த கணேஷ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் வெள்ளை நிறத்தில் குடை இருப்பது போல் ஏதோ தெரிந்துள்ளது.

அதன் அருகில் சென்று பார்த்தபோது அது காளான் என தெரிந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருந்த அந்த காளானை கண்டு வியந்த அவர் அதனை பறித்து சென்று எடை போட்டு பார்த்தபோது 2 கிலோ 600 கிராம் எடை இருந்தது தெரிய வந்தது. வழக்கமாக காணப்படும் காளான்களை விட மிகவும் பெரிய அளவிலும், அதிக எடையுடனும் இருந்ததால் அந்த காளானை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தூக்கி பார்த்து மகிழ்ந்தனர்.

Related Stories: