சென்னை: சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு குளச்சல் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பர்ட் பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பை வெளிப்படை தன்மையுடன் மேற்கொண்டு, சமூகத்தில் எந்தெந்த பிரிவினருக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து கொள்கைகளை வழி வகுக்க வேண்டும். வரும் 2036ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 15 டிரில்லியன் டாலரை எட்டும் என்று இந்த அரசு சுட்டி காட்டியுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை தந்துள்ளது.
தங்கம் தென்னரசு (திமுக): 15 டிரில்லியனா, இது எப்படி சாத்தியம்?. இது உறுப்பினரின் கருத்தா அல்லது இந்த அரசின் கருத்தா என்பதை நான் அறிய விரும்புகிறேன். தாரகை கத்பெர்ட்: உண்மையில் அது 1.5 டிரில்லியன் டாலர் தான், டைப் செய்யும் போது தவறு நடந்துள்ளது; மன்னிக்கவும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. தாரகை கத்பெர்ட தனது தவறை ஒப்புக்கொண்டு, தட்டச்சுப் பிழையினால் 1.5 டிரில்லியன் என்பது 15 டிரில்லியன் என மாறியதாக அளித்த விளக்கம் சுவாரசிய விவாதமாக இருந்தது.
