×

TAPS விதிமுறைகள் வெளியிடப்படும் வரை இடைக்கால நிவாரணம் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் விதிகள் வெளியிடப்படும் வரை, அரசு ஊழியர்களுக்கான இடைக்கால ஓய்வூதிய நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 30% சதவீதத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வந்த பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருந்தது. இதனை எதிர்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வந்தனர்.

இதற்கிடையே, 2026 ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு புதியதாக தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான விதிகள் வகுக்கப்பட்ட பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை இடைக்கால நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் ஜூன் 16ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசு CPS (Contributory Pension Scheme) ஊழியர்களுக்காக Tamil Nadu Assured Pension Scheme (TAPS) என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. TAPS விதிமுறைகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாததால், 01.01.2026 முதல் ஓய்வு பெறும் தகுதியான ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திர வாழ்வாதாரத் தொகை வழங்க இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30% சதவீதம் அல்லது ரூ.10,000 இவற்றில் எது அதிகமோ, அதில் 60% சதவீதம் அகவிலை படியுடன் கணக்கிடப்பட்டு இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TAMIL ,NADU ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,
× RELATED மேகதாது அணைக்கு எதிராக நாளை தனித் தீர்மானம்