×

கச்சிக்குடா-செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

அரக்கோணம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடாவில் இருந்து வருகிற ஜூன் 25-ந்தேதி வரையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.17652), தற்காலிகமாக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கச்சிக்குடாவில் இருந்து வருகிற ஜூன் 25-ந்தேதி வரையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.17653), தற்காலிகமாக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என கூறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பதியில் இருந்து வருகிற ஜூன் 26-ந்தேதி வரையில் அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16111), திருத்தணி, அரக்கோணம் வடக்கு கேபின், மேல்பாக்கம், திருமால்பூர் ஆகிய மாற்றுபாதை வழியாக புதுச்சேரி செல்லும் என்றும் அரக்கோணம் ரயில் நிலையம் செல்லாது.

மறுமார்க்கமாக, புதுச்சேரியில் இருந்து வருகிற ஜூன் 26-ந்தேதி வரையில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16112), மேற்கண்ட வழித்தடம் வழியாக திருப்பதி செல்லும் என்றும் அரக்கோணம் செல்லாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Tags : Kachikuda ,Tiruvallur ,Southern Railways ,Arakkonam ,
× RELATED ‘தொல்குடி தொடுவானம்’ திட்டத்தில் 16...