சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் கார்கோ பிரிவு பகுதியில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் போதைப்பொருள் சிக்கியது. சரக்கு விமானத்தில் கடத்தவிருந்த போதைப்பொருள் பார்சலை போட்டுவிட்டு கும்பல் தலைமறைவாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் சிக்கியது. கார்கோ பகுதியில் கேட்பாரற்று கிடந்த பார்சலை சோதனை செய்தபோது போதைப்பொருள் என தெரியவந்துள்ளது. ரசாயன பவுடர் என்ற பெயரில் மலேசியாவுக்கு போதைப் பொருளை கடத்த முயன்றது கண்டறியப்பட்டுள்ளது. பிடிபடுவோம் என்ற பயத்தில் பார்சலை போட்டு விட்டு கும்பல் தப்பியோட்டம்.

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்தவிருந்த மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போதைப்பொருள் கடத்தும் கும்பலை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Related Stories: