மதுரை: தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசுக்கு மனம் இல்லையா? என ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனியார் பேருந்து கட்டண நிர்ணய குழுவுக்கு 2016-இல் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உச்சநீதிமன்ற தடையை நீக்க 8 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
