சென்னை: எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று முதல் 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. இன்று மற்றும் நாளை சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். புத்தாக்க பயிற்சியில் புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடைபெற உள்ளது.
