செங்கல்பட்டு: முதலில் விஜய்- சங்கீதாவை சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் நீதிபதி சுஜாதா உத்தவிட்டார். மேலும் வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகரும், முதல்வருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். சங்கீதா அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சங்கீதா கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி ஆன்லைன் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு, ஏப்ரல் 20ம்தேதி அன்று முதல்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் கட்டாயம் அன்றைய தினம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது, தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணி இருப்பதால் தன்னால் அன்று ஆஜராக முடியாது என்றும், விசாரணை தேதியை ஒத்திவைக்க கேட்டு மனு அளித்தார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை ஜூன் 15ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சங்கீதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருப்பதாலும் அவர் நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை உள்ளதாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கினை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இவர் பிரபலமானவர் என்பதால் இது குடும்ப வழக்கு என்பதாலும் ரகசியமாக நடத்தப்பட வேண்டும் ஊடகங்களுக்கும் பொதுவெளியிலும் தெரியாமல் நீதிமன்றம் இதனை பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடிகர் விஜய் ஆஜராக அனுமதி வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் இருவரும் நீதிபதி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நடிகர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முதல்வர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன்பு ஆஜராகி தனது வாதத்தை பேசுவாரா அல்லது பணிச்சுமை காரணமாக வழக்கை ஒத்தி வைக்க வழக்கறிஞர்கள் மூலம் மனு அளிப்பாரா என்பது பரபரப்பு நிலவியது. இதனால், முதல்வர் விஜய் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு மேலும் சூடு பிடித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் ஏராளமான ஊடகங்கள் வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு குவிந்திருந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிபதி சுஜாதா முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பு வழக்கறிஞர்களும் நேரில் ஆஜராகி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த வேண்டும் என்றும் வாதிட்டனர். இதற்கு நீதிபதி சுஜாதா, ‘வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த சங்கீதா தரப்புக்கு சம்மதமா? என்று கேட்டார். இதற்கு அவர்கள் சரி என்று கூறினர். வீடியோ கான்பரன்ஸ்
